Menu

Thirupathi Seva Online Live

Saturday, January 19, 2013

பூஜையறையில் லிங்கம்!!!!


பூஜையறையில் லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள்.
***http://tamilnadutemplehistory.blogspot.com/ ***
லிங்கம் வைத்து வழிபடும்போது, மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

கழிவறை படுக்கை அரை இருக்கும் கட்டிடத்தில் லிங்கம் இருக்கவே இருக்ககூடாது.

அவசியம் தனி கட்டிடத்தில்தான் வைக்கவேண்டும்

அப்படி தனி இடத்தில் இருக்கும் லிங்கத்திற்கு ஆண்கள் சிறுமியர்கள் அல்லது வயதான பெண்கள் சுத்தமாக தினம் விளக்கேற்றி தண்ணிரிலாவது அபிஷேகம் கட்டாயம் செய்ய வேண்டும்.

நாம் என்ன எண்ணத்துடன் லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.

நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்டால், அது நம்மையே வந்தடையும்.

லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஒரு இன்னலோ இடுக்கணோ என்றால், ""நீ பார்த்துக்கொள்'' என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு.
லிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்.

மேலும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை எடுத்து வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது.

No comments:

Post a Comment