Menu

Thirupathi Seva Online Live

Wednesday, June 5, 2013

தட்சிணாமூர்த்தி திருக்கோயில் - பட்டமங்கலம்

மூலவர்    : சிவன் 
தட்சிணாமூர்த்தி திருக்கோயில்

அம்மன்/தாயார் : நவையடிக் காளி 
தல விருட்சம் : ஆலமரம் 
பழமை    : 500 வருடங்களுக்குள் 
புராண பெயர் : பட்டமங்கை 
ஊர்    : பட்டமங்கலம் 
மாவட்டம்    : சிவகங்கை 
மாநிலம்    : தமிழ்நாடு 

கோவில் வரலாறு

ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார்.

மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்ட மங்கலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்..

ஆலமரத்தை தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சி கோயிலைப் பொல பொற்றாமரை குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமூர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.

திருமால் பன்றி உருவமாகவும், பிரம்மன் அன்ன வடிவமாகவும் அதற்கு மேலாக மென்மை திருவடியுடன் வீராசனத்துடன் புன்னகை தவழும் சிவந்த திருவாய் மேனியாய், பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞானமுத்திரையும், இடது மேற்கரத்தில் நாகமும், இடது கீழ்கரம் தொடையில் வைத்தும் தட்சிணாமூர்த்தி இங்கு காட்சியளிக்கிறார்.

தென்முகக்கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி அனைத்து தலங்களிலுமே தெற்கு நோக்கியே காட்சியளிப்பார். யோகத்திற்கும், ஞானத்திற்கும் உரிய கடவுள் இவர். ஆலங்குடி, திருவாருர் போன்ற சில தலங்களில் மட்டுமே இவருக்கு தனி சன்னதி உண்டு.

ஆனால், இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே. சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் நடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம்.

இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது. இங்குள்ள சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள்தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவாறே 5 தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார்.
இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே.

திறக்கும் நேரம்

காலை6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

சிறப்புகள்

ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். 7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும். 9 முறை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும்.

11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும். 1008 முறை செய்தால் தாம் விரும்பிய பெண்ணை மனைவியாக அடையலாம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது

குரு கோவில்கள்

குரு பகவான்    Guru Bhagwan


திருத்தேன் குடித்திட்டை

குடந்தையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு வியாழ பகவான் தனிச்சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார். மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார். திட்டையில் மட்டும் நவக்கிரக பிரகஸ்பதி தனியான அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று தனி சன்னிதியில் விளங்குகிறார். 

பட்டமங்கலம் 

ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார். மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். 

மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்ட மங்கலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது 

தேவூர் 

கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது. நாகப் பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழி பட்டுள்ளனர். 

பாடி

சென்னையை அடுத்துள்ள பாடி என்ற புறநகர், திருவலிதாயம் என்று பண்டைய நாட்களில் அழைக்கப் பட்டது. பரத்வாஜ் முனிவர், அனுமான் ஆகியோர் பூஜித்த தலம். வியாழகுரு இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இங்கு இருக்கும் இறைவன் திருவலிதாயநாதர், மற்றும் திருவல்சீஸ்வரர் என்று அழைக்கபடுகிறார். அம்பிகையின் பெயர் ஸ்ரீ தாயம்மை. ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களைப் பெற்ற புண்ணியதலம். 

தக்கோலம்

அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட் சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலை நயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி. 

குருவித்துறை

மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருவில் இருக்கும் ஊர் குருவித்துறை.இங்கு சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம் உள்ளது. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர். இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக்கோயில் உள்ளது. வைஷ் ணவக் கோயிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு. 

திரிசூலம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்ப் பொருளாகச் சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. 

இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று.அம்மனின் உள்ளகை தங்கத்தாலானது. இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள். 

இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம் பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது. 

திருவொற்றியூர்

திருவொற்றியூரில் உள்ள குரு தட்சணாமூர்த்தி கோவில் சிறப்பானதாகும். ஏனெனில் அங்கே இருக்கும் குரு தட்சணாமூர்த்தி வடக்கு நோக்கி சுமார் 6 அடி உயரத்தில் இருப்பார். பொதுவாக குரு தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கியே வீற்றிருப்பார். 

ஆனால் இந்த கோவிலில் மட்டும் வடக்கு நோக்கி அழகாக வீற்றிருப்பார். பாடி திருவலிதாயம் ஈஸ்வரன் கோவிலில் உள்ள குரு தட்சணாமூர்த்தி சன்னதி மிகச்சிறந்த குரு பரிகார பூஜை ஸ்தலமாக விளங்குகிறது.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்

கோவில் வரலாறு

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்
          தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு வருடம் தோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமாகன பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 


இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின. 

ஆனால் அந்த பேரூழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டை ஸ்தலம். கைலாசம் கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி. சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களில் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது. 

மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிந்தும், இருந்த இந்தப் பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர். அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளாள் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவுள்ள ஒரு மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர். 

அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தரிசனம் அளித்தது. அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார். 

இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும். இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார். 

இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

நிறம் மாறும் சிவபெருமான் கோவில்

    தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநல்லூர் என்ற புராணப் பெயர் கொண்ட நல்லூர் என்ற ஊரில் தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவபெருமான் கோவில் அமைந்துள்ளது. குந்திதேவி தனது தோஷம் நீங்க வழிபட்ட தலம் என்ற சிறப்பை இந்த கோவில் பெற்றுள்ளது.

நிறம் மாறும் சிவபெருமான் கோவில்
கோவில் வரலாறு

            தன்னை மணம் புரிவதற்காக இமயமலையில் தவம் செய்து வந்த பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தின் போது உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இமயமலையில் திரண்ட தன் காரணமாக வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது.

      இதையடுத்து அகத்தியரை பொதிகை மலை பகுதிக்கு செல்லுமாறு பணிந்தார் சிவபெருமான். ஆனால் திருமணத்தை காணமுடியாமல் போகுமே என்று மனம் வருந்திய அகத்தியரை, 'தென்பகுதியில் உனக்கு எனது திருமண காட்சியை காட்டி அருள்வேன்' என்று கூறி தேற்றினார் சிவபெருமான்.

           அதன்படி சிவபெருமான், அகத்தியருக்கு திருக்கல்யாண காட்சி கொடுத்த இடம் தான் திருநல்லூர். திருமண காட்சியை கண்டு மகிழ்ந்த அகத்தியர், இத்தலத்தில் உள்ள சுந்தரலிங்கத்தின் வலது புறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து வழிபட்டார்.

      அகத்தியர் தரிசித்த ஈசனின் திருமணக் கோல காட்சியை மூலவர் லிங்கத்தின் பின்புறம் காணலாம். ரேஸ்வரர் தினமும் ஐந்து முறை நிறம் மாறுகிறார். தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவ இங்குள்ள கல்யாண சுந்த ரத்தின பச்சை, இன்ன நிறமென்று கூறமுடியாத வண்ணம் என ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால், இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

      இத்தலத்தில்தான் திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் வழங்கியுள்ளார் சிவபெருமான். அதன் காரணமாக இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெருமாள் கோவிலைப் போன்று சடாரி ஆசி வழங்கப்படுகிறது.

8 கரங்களுடன் நடராஜர்
        அம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், 8 கரங்களை கொண்ட காளி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விஸ்வநாதர், அகத்தியர் ஆகியோரும் இங்கு அருள்பாலித்து வருகின்றனர். மேற்கு கோபுர வாசலின் மேற்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார்.

       காசியை தவிர்த்து, இந்த ஆலயத்தில் மட்டுமே கணநாதர் பலிபீட வடிவில் தரிசிக்கப்படுகிறார். ஆண்டுக்கு ஒரு முறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானதாகும். அன்றைய தினம் திருநல்லூர் மட்டுமின்றி, பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள், தங்கள் பசு ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாஸ்கந்தர்
        இந்த கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி, திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு இணையாக அமைந்துள்ளது. மாசி மகத்தின் போது இவர் கோவிலுக்குள் உலா வருவார். மாடக் கோவிலின் படிகள் வழியாக சோமாஸ்கந்த மூர்த்தி இறங்கும்போது, அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள்.

ஆனாலும் கூட பெருமானின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம். தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. இதனை ஆதிமரம் என்கின்றனர். ஏனெனில் இந்த வில்வ மரம் தான் முதல் முதலாக தோன்றிய வில்வமரம் என்று கூறப்படுகிறது. ஆகையால் இம்மரத்தின் வில்வ இலைகளால் இறைவனை அர்ச்சனை செய்ய நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சப்தசாகரம் தீர்த்த மகிமை
     இந்த தலத்தில் உள்ள சப்தசாகரம் என்ற தீர்த்தம், மாசி மகம் அன்று கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதன் பலனை கொடுக்கும் என்பது இத்தலத்திற்கு உரிய பெருமையாகும். பாண்டவர்களின் தாய் குந்தி தேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்ற காரணத்தால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது.

அந்த தோஷம் நீங்க நாரதரிடம் யோசனை கேட்டார் குந்திதேவி. 'ஏழு கடல்களில் நீராடினால், அந்த தோஷம் நீங்கும்' என்று வழி கூறினார் நாரத முனிவர். 'பெண்ணான என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும். வேறு ஏதாவது வழி கூறி அருள வேண்டும்' என்று மன முருக வேண்டினாள் குந்திதேவி.

தற்கு நாரதர், 'அப்படியானால் கும்பகோணம் அருகில் உள்ள திருநல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடுங்கள். அதற்குள் நான் ஒரு வழியை கண்டுபிடிக்கிறேன்' என்று கூறினார். நாரதரின் சொல்படி, குந்திதேவி உடனடியாக திருநல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு வந்தார்.

அதற்குள் நாரதர், ஏழு கடல்களின் நீரையும் இத்தலத்தில் உள்ள குளத்தில் சேர்ப்பித்தார். ஏழு கடல்களின் நீரை இந்த குளத்தில் சேர்த்ததால், 'சப்தசாகரம்' என்று இந்த தீர்த்தம் பெயர்பெற்றது. பின்னர் மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்திதேவி, தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடினார்.

மகம் நட்சத்திரத்திற்கு உரிய கோவில் நல்லூர் ஆகும். இந்த குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சோம வார விரதம்

       சோமவாரம் திங்கட்கிழமை திங்களும் (பிறை நிலாவும்) திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை. ஆகவே இவனுக்குச் சோமசுந்தரன் என்ற ஒரு பெயரும் வழங்குகின்றது. கார்த்திகை மாதம், முதல் திங்கட்கிழமையன்று சோமவார விரதத்தை தொடங்க வேண்டும்.

சோம வார விரதம்

தொடர்ந்து ஒவ்வொரு திங்களன்றும் விரதமிருப்பது சிறப்பாகும். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கலாம். அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் விரதமிருக்கலாம். அல்லது மூன்றாண்டுகள் விரதம் காக்கலாம். அல்லது ஓராண்டு விரதமிருந்தாலும் போதும். 

அல்லது கார்த்திகை மாத சோமவாரம் முழுவதும் விரதமிருக்கவேண்டும். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள் இரவு ஒருபொழுது மட்டும் எளிய உணவுகளை உண்ண வேண்டும்.