Menu

Thirupathi Seva Online Live

Monday, February 4, 2013

ஸ்ரீகல்யாணி மாரியம்மன் கோவில்


கோவில் தோன்றிய வரலாறு

                         ஸ்ரீகல்யாணி மாரியம்மன் கோவில்

        சின்னகுமார்பட்டி கிராமம் (வெங்காடம்பட்டி கிராமம், ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்) திருநெல்வேலி- தென்காசி மெயின் ரோட்டில் மகிழ்வண்ணநாதபுரம் ஊரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்படி கோவிலில் கொடை விழா நிகழ்ச்சிகள் சுமார் 36 வருடகாலமாக நடந்து வருகிறது.

முதலில் கோவில் கட்டியுள்ள இடத்தில் இருக்கும் வேப்பமரத்தின் அடியில் ஒரு சிறிய மேடையில் மண் விளக்கு வைத்து வருடம் ஒரு முறை தை மாதம் கடைசி செவ்வாயன்று கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

இந்த வேப்பமரம் இருந்த இடத்தில் ஒரு அம்மன் கோயில் கட்டவேண்டும் என ஊரில் பலர் அருள் வந்து சொன்ன போதும் அந்த இடத்தின் அப்போதைய உரிமையாளர் திரு.சுந்தரலிங்கநாடார் எல்லோரிடமும் சொல்லும் அந்த தெய்வம் என் வீட்டில் யாருக்காவது வந்து சொல்லட்டும், பிறகு பார்க்கலாம் எனக் கூறி தப்பி வந்துள்ளார்.

அவர் காலத்திற்கு பின் அவருடைய ஒரே மகன் லேட் திரு. நடராஜன் அவர்களின் மூத்த மகன் திரு.தயாளசுந்தர் அவர்களின் மனைவி டாக்டர் பவானி அவர்கள் திருமணமாகி 2 மாதங்களில் அந்த கிராமத்திற்கே சென்றிருந்த போதில் அவர் கனவில் அம்மன் தோன்றி ஒரு மாதமாக காய்ச்சலால் அவதிப்படும் உன் கணவர் குணமாக வேண்டுமானால் என் சந்நதியில் வந்து வழிபட வேண்டும் என ஒரு தாய்வடிவில் வந்து கூறியுள்ளது.

அந்த இடம் எங்கு உள்ளது என்று தெரியாத நிலையில் டாக்டரின் தாயார் அதிகாலை திடீரென்று வீட்டிற்கு வந்து அன்று தான் அந்த கிராமத்திற்கு அழைத்துசென்றார். திருமதி. பவானி அவர்களின் கனவில் வந்த அதே மேடையையும் மண்விளக்கையும் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.

எனவே கனவில் சொன்னபடி அந்த கோவில் அதே இடத்தில் கட்டி திரு.நடராஜன் அவர்களால் உள்ளுர் உறவினர்கள், நண்பர்கள், பக்தகோடிகள் மூலம் நன்கொடை பெறப்பட்டு 1985ம் ஆண்டு அன்று கோவில் கட்டப்பட்டது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொடைவிழா, வருஷாபிசேக விழா, தினசரி பூஜைகள் (காலை 5-8 மணி மாலை 5-8 மணி) பௌர்ணமி விளக்கு பூஜை, கடைசி வெள்ளி பூஜைகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதே ஊரில் பல ஆண்டுகளாக முறைப்படி ஸ்ரீகல்யாணி மாரியம்மாளுக்கு பணிவிடை மற்றும் சிறப்பாக பூஜை முதலியன செய்து வரும் திரு.பாலமுருகன், போலீஸ்காராக பணிகிடைத்து ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு லாரி மோதி லாரியின் அடியில் அகப்பட்டும், “அம்மா என்னைக் காப்பாற்று “ என்ற அழைப்பிற்கு ஓடிவந்தது போல் ஒரு காயமும் இல்லாமல் காப்பாற்றினாள் என்றால் அது மிகையாகாது.

இதே ஊரில் உள்ள திரு.சின்னமணி நாடார் ஒவ்வொரு கொடைவிழாவின் போதும் அக்னிசட்டி தன்தலையில் ஏற்றி ஊர் முழுவதும் ஆடி வருவார் அருள் வாக்கும் கூறும் இவரின் மகன் திரு.நடராஜன் கேரளாவில் இரும்பு வியாபாரம் செய்ய சென்றபோது காலை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

(அதே நாளில் திருமதி.பவானி யாரோ தலையில் இரண்டு புறமும் மாறி மாறி அடிப்பது போன்றும் , கல்யாணி மாரியம்மாள் வந்து தடுத்து பவானி அவர்கள் தலையில் 3 எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து உன்னை காப்பாற்றி விட்டேன் என்று கூறி சென்றது).

அது மாதிரியே நடராஜனின் தலையிலும் விரோதிகள் தலையின் இருபுறமும் தாக்கியுள்ளனர். சுய நினைவு இழந்த நடராஜன் திடீரென்று சுயநினைவு திரும்ப ஊருக்கு திரும்பி அன்று இரவு நடந்த கோவில் கொடைவிழாவில் பங்கேற்று அக்னிசட்டி எடுத்தது மிகவும் உணர்ச்சி பொங்கிய அதிசயமாகும். இன்று எந்த குறைபாடும் இல்லாமல் சுய நலத்துடன் உயிர்பெற்றார்.

இதைப்போலவே பல பக்தகோடிகள் திருமணமாகவோ, குழந்தை பாக்கியம் பெறவோ, வீட்டுப் பிரச்சனைகளுக்காகவோ, வியாபார அபிவிருத்திக்காகவோ, வேலை கிடைக்கவோ அம்பாளிடம் பிரார்த்தனையும் எளிய நேர்த்திகடன் செய்தால் அம்பாள் அடுத்த கனமே நிறைவேற்றி வைப்பாள் என்றால் மிகையாகாது. எனவே அனைவரும் கல்யாணி மாரியம்மாள் அருள் பெற வேண்டுகிறோம்.

இந்த வருட திருவிழா நிகழ்ச்சிகள் (2013)

* திங்கட் கிழமை (4-2-13) அன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜையும், அன்று இரவு 7 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்

* செவ்வாய் கிழமை (5-2-13) நண்பகல் 12 மணியளவில் கேரளா செண்டா மேளம் முழங்க குற்றாலம் புனித நீர் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.

* செவ்வாய் இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

* நள்ளிரவு 12 மணிக்கு கல்யாணி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், கண்கவர் வாணவேடிக்கையும் நடைபெறும்.

No comments:

Post a Comment